அட பெண்களுக்கு தீபாவளி பரிசாக இலவச சிலிண்டரா.!! அதை பெறுவது எப்படினு தெரியுமா..? அப்ப இத படிங்க..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு தீபாவளி பரிசாக இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்று உ.பி முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். அதாவது, இத்தகைய பரிசு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் பதிவு செய்த பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் , இத்திட்டத்தில் இணைய, அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இலவச சிலிண்டருக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
1) முதலில் இந்த திட்டத்திற்கான http://www.pmuy.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.பின்பு அந்த பக்கத்தில் பல மொழிகளில் படிவம் இருக்கும், நமக்கு தேவையான மொழி படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
2026 சட்டமன்ற தேர்தல்.. 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்த திமுக.. விவரம் உள்ளே!!
2 ) பிறகு, அந்த படிவத்தை பூர்த்தி செய்து, பிபிஎல் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வருமான சான்றிதழ் சாதி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள எல்பிஜி மையத்தில் சமர்ப்பிக்கவும்.
3) படிவத்தை சமர்ப்பித்த பிறகு உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு , அங்கீகரிக்கப்பட்டதும், உங்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும். மேலும், இதுபோன்ற திட்டத்திற்கான பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.



























