UPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்ந்த பணியிடத்திற்கு மத்திய பணியாளா் தோ்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக முதன்மைத் தேர்வு எழுத முடியாத காரணத்தால் மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டும் என்று தேர்வர் மூவர் வழக்கு தொடர்ந்தனர். இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
யுபிஎஸ்சி
இந்தியாவில் மத்திய பணியாளா் தோ்வாணையம் மூலமாக நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்ந்த பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு யுபிஎஸ்சியின் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு ஜனவரி 7, 8, 9, 15, 16 உள்ளிட்ட நாட்களில் நடைபெற்றது. கொரோனா பரவல் வேகமாக பரவிக் கொண்டிருந்ததால் தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் தேர்வர்கள் தேர்வு எழுதும் முன்பாக விரைவுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள்.
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – வங்கி கணக்கை அப்டேட் செய்வது எப்படி?
இதில் உடனடியாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் என்பதால் 3 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் இந்த 3 நபர்களும் தங்களுக்கு சட்டப்பிரிவு 32 என்பதன் கீழ் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அத்துடன் யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வில் பங்கேற்க தங்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்குமாறு யுபிஎஸ்சிக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக யுபிஎஸ்சி தெரிவித்தாவது, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அல்லது வயது வரம்பு சலுகை உள்ளிட்டவை மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்று கூறியுள்ளது.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது, இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை மேற்கொண்டு தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்க சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மனுதாரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கூறியதாவது, கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் குடிமைப் பணிகள் தோ்விற்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டபோது கூடுதலாக தேர்வர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதே போல் தற்போது கொரோனா பரவல் காரணமாக தேர்வில் பங்கேற்க முடியாததால் மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கேட்டு கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதனை பரிசீலனை செய்த நீதிபதிகள், இந்த வழக்கை வரும் மார்ச் 28ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.