10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு திட்டம்!!
உத்திரப் பிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அம்மாநில பஞ்சாயத்து ராஜ் துறையின் பரிந்துரைகளைத் தொடர்ந்து அரசாங்கம் இம்முடிவை எடுக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்டது. அதன் பின்னர் நோய்த்தொற்று குறைந்ததால் கல்வி நிறுவனங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளும் படிப்படியாக திறக்கப்பட்டது. ஏப்ரல் 24, 2021 அன்று அம்மாநிலத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது அம்மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 6 காஸ் சிலிண்டர், வாஷிங்மெஷின் இலவசம் – முதல்வர் வாக்குறுதி!!
இதன் காரணமாக தேர்வுகள் மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது. மார்ச் 27 முதல் 28ம் தேதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அங்கு 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் மே 10 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மே 12 ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டது. இந்த ஆண்டு 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு மாநிலம் முழுவதும் 56 லட்சம் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அம்மாநிலத்தில் மற்ற ஆண்டுகளைப் போலவே, தேர்வு மையங்களிலும் கடுமையான விதிமுறைகள் அமலில் இருக்கும். சி.சி.டி.வி.களைத் தவிர, அனைத்து மையங்களிலும் நேரடி வெப் கேமரா கண்காணிப்பு அறிமுகப்படுத்தப்படும். தேர்வு மையங்களும் கடுமையான கொரோனா வழிகாட்டுதல்களைப் பராமரிக்க வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்