உத்திரபிரதேச மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்க இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் விவசாயிகளின் நலனிற்காக பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் உத்திரபிரதேச அரசு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டம் மூலம் பல்வேறு விவசாயில் பலனடைய இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு 3 புதிய திட்டங்களை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளுக்காக முக்யமந்திரி கெத் சுரக்ஷா யோஜனா, மாநில விவசாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உ.பி. அக்ரிஸ் யோஜனா போன்ற திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டங்களை தொடங்க ரூ. 200 கோடியை மாநில அரசு ஒதுக்கி இருக்கிறது.