ஜூன் வரை ‘ஆன்லைன்’ வகுப்புகள் மட்டுமே நடைபெறும் – சென்னை பல்கலை அறிவிப்பு!!
சென்னை பல்கலைக்கழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலே நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. பின்னர் நோய்த்தொற்று குறைந்த காரணத்தால் கடந்த டிசம்பர் மாதத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கின. மேலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் பிப்ரவரி 8ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
TNPSC தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் – 102 பேர் நியமனம்!!
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வெளியான அறிவிப்பில் ஜூன் மாதத்திற்கு பின்னரே நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி வெளியிட்டு உள்ள உத்தரவில், சென்னை பல்கலையில் ஜூன் மாதம் வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
100 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் நிகழ்வு – அம்பாசமுத்திரம் மாணவி தேர்வு!!
அதுமட்டுமின்றி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடைபெறும் என கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையில் மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகள் நாளை மறுநாள் (பிப்ரவரி 8) திறக்கப்பட உள்ளது. இதற்காக கல்லூரி வளாகங்கள், வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கல்லூரிகளும் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்