உயர்கல்வித் தகுதியை பல்கலைக்கழகம் நிர்ணயிக்கலாம் – நீதிமன்றம் உத்தரவு!!
எதிர்காலத்தில் உயர்கல்வித் தகுதியை பல்கலைக்கழகம் நிர்ணயிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு:
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் சுகாதார ஆய்வாளர் பட்டைய படிப்பில் சேர உயர்கல்வித்தகுதி நிபந்தனை விதித்துள்ளது. இதனை எதிர்த்து பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். அந்த பெண் அளித்த மனுவின் விவரம் பின்வருமாறு “சுகாதார ஆய்வாளர் முதுகலை பட்டையப்படிப்பில் சேர பி.எஸ்.சி.(வேதியியல்), பிளஸ் 2வில் உயிரியல்/தாவரவியல் மற்றும் விலங்கியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலை நிபந்தனை விதித்துள்ளது.
கேரளாவில் 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!!
இது சட்ட விரோதம். இதை ரத்து செய்து 2018-2019ம் ஆண்டு நிர்ணயித்த பி.எஸ்.சி வேதியியல் கல்வித்தகுதி அடிப்படையில் என் விண்ணப்பத்தை பரிசீலித்து இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதியின் பதில்:
இந்த மனுவை விசாரித்த நீதிபதி “குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க நிகர்நிலை பல்கலைக்கு உரிமை உள்ளது. கல்வித்தகுதி தொடர்பான நிர்வாக முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. தற்போது நாம் தொழில்நுட்பம் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
66 காலியிடங்கள், 2 லட்சம் பேர் போட்டி – நாளை TNPSC குரூப் 1 தேர்வு!!
தொழில்நுட்பம் மேம்பாடு அடைந்துள்ளது. இதற்காக குறிப்பிட்ட திட்டத்திற்கு திறமையான நபர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் பல்கலை நிர்ணயித்த கல்வித்தகுதியை தவறு காண முடியாது. எதிர்காலத்தில் உயர் கல்வித்தகுதியை பல்கலை நிர்ணயிக்கலாம்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்