கேரளாவில் 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!!
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 மாதங்கள் கழித்து கேரளாவில் வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.
கொரோனா பொது முடக்கம்:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் 16ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் கடந்த ஆண்டு இறுதித்தேர்வு கூட எழுத முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில் பொது முடக்கம் இந்த கல்வியாண்டிலும் நீடித்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தான் பாடங்கள் நடத்தப்பட்டன. நோய் பரவல் தாக்கம் சிறிது குறைந்துள்ளதால் கடந்த இரு மாதங்களாக ஒரு சில மாநிலங்களில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
பணியின் போது ஊனம் ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
ஊரடங்கு தளர்வுகள்:
ஊரடங்கில் விதிக்கப்பட்ட தளர்வுகளினால் கடந்த செப்டம்பர் 21ம் தேதியிலிருந்து 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. இதனால் சில வட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கேரளாவில் பள்ளிகள் திறப்பு:
கேரளாவிலும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டன. இதற்காக மாநில முதல்வர் பினாரயி விஜயன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில், கொரோனா வழிகாட்டுதல்களுடன் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஜேஇஇ தேர்விற்கு இலவச ஆன்லைன் பயிற்சி – 6000 மாணவர்கள் பதிவு!!
அதன் அடிப்படையில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஒரு நேரத்தில் 50% மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும். பெற்றோரின் அனுமதி கடிதம் வைத்திருக்கும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்