பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்கும்படி அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளார்.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
கேரள மாநிலத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது. அம்மாநிலத்தில் தினசரி பாதிப்பு பத்தாயிரத்தை எட்டியுள்ளது. கேரளாவில் இதுவரை 12,39,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4930 பேர் பலியாகியுள்ளனர். அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மற்ற மாநிலங்களை போலவே கேரளாவிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு பெருமளவு காணப்படுகிறது. இந்திய அளவில் அதிகம் நோய் தொற்றுக்கு உள்ளான பட்டியலில் கேரளா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து பெருகி வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – மே 2 காலை 8.30 மணிக்கு துவக்கம்!!
தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஆகியவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கேரளாவிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கோரியுள்ளார்.