ஆப்கானில் ஆண், பெண்களுக்கு இடையே திரையிட்டு பல்கலை வகுப்புகள் – தலிபான்கள் ஆட்சி!
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது பல்கலைக்கழக வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், வகுப்பறைகள் ஒரு திரைச் சீலையால் பிரிக்கப்பட்டு ஒரு பக்கத்தில் ஆண்களும், மறு பக்கத்தில் பெண்களும் அமர்ந்து பயின்று வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
வகுப்புகள் துவக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியமைத்துள்ள தலிபான்கள், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பெண்களுக்கான கல்வி உரிமையை அளிப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். மேலும் பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண்களுக்கு சில நிபந்தனைகளையும் விதிப்பதாக தலிபான்களின் அறிக்கை குறிப்பிட்டிருந்தது. அறிவிக்கப்பட்ட படி, ஆப்கானிஸ்தான் நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் நேற்று (செப்டம்பர் 6) முதல் மீண்டுமாக திறக்கப்பட்டன.
TCS நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்புகள் – விண்ணப்ப முறை & தகுதிகள்!
இந்த வகுப்புகளில் பெண்களும் கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பல்கலைக்கழக வகுப்பறைகளில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட இருபாலருக்கும் ஒரே நேரத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்கள் மற்றும் பெண்கள் அமர்ந்துள்ள வகுப்பறைகளில் இரு பாலருக்கும் இடையே ஒரு திரைசீலை தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் அனைவரும் முகத்தின் பெரும்பகுதியை மறைக்கும் அங்கி மற்றும் ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட தலிபான்கள், அந்நாட்டின் கல்வி கொள்கையை கோடிட்டு காட்டி, பெண்களின் கல்வியில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என கூறியுள்ளது. AFP அறிக்கையின்படி, தலிபான்களின் கல்வி ஆணையம் பெண்களுக்கு, மற்ற பெண் ஊழியர்கள் மட்டுமே பாடங்களை கற்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இல்லையென்றால் முதியவர்களை கொண்டு கற்பித்தல் பணிகள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அண்ணா பல்கலையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை – தமிழக அரசு!
தலிபான்களின் முதல் கட்ட ஆட்சியின் போது, 2001 ஆண்டுக்கு முன் வரை தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் உடன் சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல ஒவ்வொரு பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறும் போது ஒரு ஆண் உறவினரின் துணையுடன் செல்ல வேண்டும் என்பது தலிபான்களின் முக்கியமான உத்தரவுகளில் ஒன்றாகும்.