அண்ணா பல்கலையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை – தமிழக அரசு!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை வைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் சட்டப்பேரவையில் இன்று அறிவித்து உள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றினார். மறுநாள் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழக கோயில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை – அமைச்சர் அறிவிப்பு!
உலகம் முழுதும் போற்றப்பட்டு மறைந்தவர் தான் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள். ராமேஸ்வரத்தில் பிறந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த இளைஞர்களின் நாயகனை கௌரவிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை வைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் தமிழக சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
உலகில் முதல்முறையாக குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – கியூபா அறிமுகம்!
அதனை தொடர்ந்து பேசிய அவர் சென்னை ராணிமேரி கல்லூரி வளாகத்தில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை வைக்கப்படும் என்றும் மறைந்த சுதந்திர போராட்ட பெண் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் சிலை அமைக்கப்படும் எனவும் கூறினார். மேலும் சென்னை கிண்டி மண்டபத்தில் மருது சகோதரர்களுக்கு சிலை வைக்கப்படும் என்றும் ரூ. 3.38 கோடி செலவில் சென்னையில் உள்ள காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மண்டபம் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்