பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் – யுஜிசி அதிரடி !
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள்:
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைத்து வருவதால், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த கட்டாயப்படுத்தும் யுஜிசி உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி நாட்டின் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இன்று விசாரணைக்கு வந்த பொழுது, செப்டம்பர் 30 க்குள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயமாக நடத்தி முடிக்குமாறு யுஜிசி அனைத்து பல்கலைக்கழகங்களையும் வலியுறுத்தி உள்ளது. இந்த தேர்வுகள் ஆஃப்லைன், ஆன்லைனில் அல்லது இரண்டும் கலந்து கூட நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசாங்கங்கள் மாநில பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தன. ஆனால் மாநிலங்கள் அத்தகைய முடிவை எடுக்க முடியாது என்று யுஜிசி கூறியது. அதே நேரத்தில், கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு யுஜிசி மற்ற அனைத்து இடைநிலை செமஸ்டர் தேர்வுகளையும் (இறுதியாண்டு தவிர) ரத்து செய்துள்ளது.
மேலும் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனவும், தேர்வெழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது எனவும் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்