தமிழகத்தில் இனி புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வு என 2 நிலைகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் தாள்-1, தாள்-2 என இரண்டு நிலைகளில் நடைபெறும். தற்போது இதற்கான புதிய உத்தரவை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்துள்ளது.
தட்டச்சு தேர்வு:
தமிழகத்தில் கடந்த 75 ஆண்டுகளாக, இளநிலை தட்டச்சு தேர்வில் தாள்-1 ஸ்பீடு, தாள் – 2 ஸ்டேட்மென்ட், லெட்டர் டைப்பிங் ஆகிய முறைகளில் தான் தேர்வு நடந்து வருகிறது. இந்த முறையை ரத்து செய்து, இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வின் புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டது. புதிய முறைப்படி, இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள்-1 ஸ்டேட்மென்ட், லெட்டர் தேர்வாகவும், தாள்- 2 ஸ்பீடு தேர்வாகவும் நடைபெற உள்ளது.
BIG NEWS!! வங்கிகளுக்கு நாளை முதல் தொடர் விடுமுறை – இந்த நாட்களில் Bank செயல்படாது! பட்டியல் இதோ!
Exams Daily Mobile App Download
இந்த புதிய நடைமுறையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, உயர்நீதிமன்ற கிளை தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, 75 ஆண்டுகளாக இருந்த நடைமுறைகள் நீக்கப்பட்டு, தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி தட்டச்சு தேர்வை புதிய முறைப்படி (தாள் 1- ஸ்டேட்மென்ட், லெட்டர், தாள் 2- ஸ்பீடு) நவ.13-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திற்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.