“சீனா மீதான வரி கணிசமாக குறைக்கப்படும்”.. டிரம்ப் எடுத்த திடீர் முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்..!!
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விகிதங்களை அதிரடியாக உயர்த்தினர். அதன்படி 50 க்கும் அதிகமான நாடுகள் மீது 11 – 50 % வரையிலான பதில் வரிகள் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இது குறித்து கேள்வி எழுப்ப உலக நாடுகள் தயக்கம் காட்டி வந்த நிலையில் சீனா, அமெரிக்க பொருட்கள் மீது 34 % வரி விதிப்பதாக அறிவித்தது.
Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதனால் கோபமடைந்த டிரம்ப், சீனாவின் மீது மீண்டும் மீண்டும் வரியை உயர்த்தினர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்தது. மேலும், அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரி விதிப்பால் பயனாளர்கள் மத்தியில் நுகர்வு திறன் குறைந்திருப்பதை அறிந்த டிரம்ப், வரி விதிப்பு தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் “சீன இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 245% வரி கணிசமாகக் குறைக்கப்படும் என்றும், இது தொடர்பாக சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்”.


























