Truecaller: இந்தியாவில் அரசு சேவைகள் அறிமுகம் – இனி முறைகேடுகளில் ஈடுபட முடியாது!!
இந்தியாவில் உள்ள குடிமக்களையும், அரசாங்கத்தையும் நேரடியாக இணைக்கும் வகையில் Truecaller செயலியில் புதிய வசதியை கொண்டு வந்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Truecaller
தற்போதைய கால கட்டத்தில் ஆன்லைன் முறையில் முறைகேடுகள் அதிகம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு அதிகாரி அல்லது வங்கி அதிகாரி போன்று பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு தனிப்பட்ட தகவல்களை மோசடிக்காரர்கள் கேட்டறிகின்றனர். இதன் மூலமாக வங்கி கணக்கில் இருக்கும் தொகைகள் திருடப்படுகின்றன. இதையடுத்து தற்போது இந்த முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் Truecaller செயலியில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது Truecaller செயலியில் டிஜிட்டல் அரசாங்க டைரெக்டரி ஒன்றை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசு அதிகாரி எண்களை சுலபமாக கண்டறியலாம். அதன்படி இந்த செயலியில் ஹெல்ப்லைன்கள், சட்ட அமலாக்க முகவர், மருத்துவமனைகள், தூதரகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 23 மாநிலங்கள் என அனைத்து முக்கிய துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ICMR இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள் – 6,000 முறை முயற்சி!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் நீங்கள் உண்மையான அதிகாரியை கண்டறிய அரசாங்க தொடர்புகளின் படத்தில் நீல நிற டிக் உடன் பச்சை பின்னணியைக் கொண்டிருக்கும். இதனை தொடர்ந்து மாவட்ட மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான தொடர்பு எண்களை இணைக்கவும் Truecaller நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலமாக அரசு அதிகாரியாக போலியாக பேசுபவர்களை கண்டறிய முடிவதால் மோசடி நடைபெறுவது வெகுவாக குறையும் என கூறப்படுகிறது.