ICMR இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள் – 6,000 முறை முயற்சி!
இந்தியாவில் அதிகரித்து வரும் இணையதள மோசடிகளுக்கு மத்தியில் தற்போது தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இணையத்தை முடக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இணையதளம் முடக்கம்:
இந்தியாவில் அனைத்து துறைகளிலும் வேலைகள் தற்போது ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வருகிறது தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மக்கள் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகள் முதல் தனிப்பட்ட வேலைகள் வரை அனைத்தையும் செய்யலாம். அந்த அளவிற்கு வசதிகள் வந்துவிட்டது. இதனால் மக்களின் நேரமும், வேலைப்பளுவும் குறைகிறது. மறுபுறம் இதே ஆன்லைன் வாயிலாக பல்வேறு மோசடிகளும் நடந்த வண்ணம் உள்ளது.
Exams Daily Mobile App Download
குறிப்பாக வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலே பணம் பறிபோகும் நிலை உள்ளது. மற்றொரு புறம் நாம் இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் தேவையில்லாத செயலிகள் வாயிலாக டேட்டாக்கள் திருடப்பட்டு ஹேக்கர்களுக்கு நேரடியாக செல்கிறது. அந்த வகையில் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தகவல் சேகரிக்கும் கணினியின் சர்வரை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.
NABARD Development Assistant Mains தேர்வு தேதி 2022 – வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
இதனால் பிரபலங்கள் மற்றும் விஐபி களின் தனிப்பட்ட விவரங்கள் திருடு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரில் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ICMR இணையதளத்தை முடக்க 6,000 முறை முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.