தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில், அது எப்போது கையில் கிடைக்கும் என்பது குறித்து ஒரு சிறு தொகுப்பை இப்போது காண்போம்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு:
ரேஷன் கார்டு மூலம் அரசு தரும் மலிவு விலை பொருட்கள், மளிகை ஜாமான்கள், புயல் வெள்ளம் போன்ற நேரங்களில் அரசு தரும் நிவாரண தொகை அது மட்டுமல்லாமல் பொங்கல் பரிசுத்தொகுப்பு இலவச வேட்டி, சேலை என அனைத்தையும் ரேஷன் கார்டுகள் மூலம் மக்களுக்கு வழங்கி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது பிறகு மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையும் இந்த ரேஷன் கார்டு மூலம் தரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் – மத்திய அரசின் முடிவு?
இந்நிலையில் தமிழகத்தில் மாதம் தோறும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது. ஆனால் தமிழக அரசு ரூ.1000 உரிமைத்தொகை கொடுத்த பிறகு ரேஷன் கார்டு அச்செடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. மேலும் மக்களவைத் தேர்தலும் வர விருப்பதால் இந்தப் பணி மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே அரசு விரைவில் புதிய ரேஷன் கார்டுகளை அச்சிட்டு தர வேண்டும் என விண்ணப்பித்தவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.