10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு -மாநில அரசு அறிவிப்பு !!
கொரோனா பரவல் காரணமாக திரிபுரா மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு :
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தங்களுக்குக்கேற்ப கட்டுபாடுகளை அதிகரித்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டுகிறது. இதனால் அம்மாநில அரசு ஊரடங்குகளை அறிவித்தும், கொரோனா விதிமுறைகளை விதித்தும் மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொண்டும் வருகிறது. .
இதனை தொடர்ந்து மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. வீட்டிலிருந்தே மாணவர்கள் கல்வியை கற்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களை தொடந்து தற்போது திரிபுரா மாநில அரசு பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது.
தற்போது திரிபுரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் நாள் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகயாக அம்மாநில அரசு 10,மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் சி.பி.எஸ்.இ 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு மே 8 ம் தேதி நடைப்பெற இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது.
தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கபப்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுளது. திரிபுரா மாநிலத்தில் 10 ம் வகுப்பு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான தேர்வு முடிவு ஜூன் 20 அறிவிக்கபப்டும் எனவும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார் .