தமிழக அரசு பொறியியல் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை – கொரோனா எதிரொலி!!
திருச்சி மாவட்டம் அரசு பொறியியல் கல்லூரியில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரிகளில் முதற்கட்டமாக இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதியும், மற்ற அனைத்து மாணவர்களுக்கும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாணவர்கள் கல்லூரிக்கு வரும் கொரோனா கட்டுப்பாடு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இருந்த போதிலும் தமிழகத்தில் சில இடங்களில் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரவி வருகிறது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கொரோனா அறிகுறி தென்பட்ட காரணத்தினால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கல்லூரி வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசு ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவை ஊதியம் – ரூ,27.85 கோடி நிதி ஒதுக்கீடு!!
இதுகுறித்து அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சாந்தி கூறுகையில், “மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.