அரசு ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவை ஊதியம் – ரூ,27.85 கோடி நிதி ஒதுக்கீடு!!

0
அரசு ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவை ஊதியம் - ரூ,27.85 கோடி நிதி ஒதுக்கீடு!!
அரசு ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவை ஊதியம் - ரூ,27.85 கோடி நிதி ஒதுக்கீடு!!
அரசு ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவை ஊதியம் – ரூ,27.85 கோடி நிதி ஒதுக்கீடு!!

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 6 மாதம் நிலுவை ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்கு 14 மாத நிலுவை ஊதியமும் தர ரூ.27.85 கோடி நிதி செலவினத்திற்காக துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆசியர்களுக்கான நிலுவை ஊதியம்:

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஊழியர்கள், பணியாளர்கள் என 450 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஓய்வூதியதாரர்கள் 350 பேர் உள்ளனர். அவர்களுக்கு 14 மாதங்களாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கோரிக்கை மனுவை பல முறை வழங்கப்பட்டும் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து வழங்கப்பட்ட புகார் மனுக்கள் உயரதிகாரிகளால் பல முறை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பல முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அரசு சார்பில் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை, பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கப்படும் நிதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

நவீனமயமாகும் வங்கிகள் – காசோலைகளில் சிடிஎஸ் வசதி அறிமுகம்!!

மேலும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள குறைகள் மற்றும் நிதி குறித்து ஆராய்ச்சி செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 14 மாதங்களாக தரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதற்கு விரைவில் தீர்வு காணவும், நிதி வழங்கவும் ஏற்பாடுகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உத்தரவிட்டார்.

அரசு பள்ளி மாணவிகளில் மேலும் 6 பெற்றோர்களுக்கு கொரோனா உறுதி – கட்டுப்பாடுகள் தீவிரம்!!

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பின் படி, “2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 14 மாதங்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் 2021 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 6 மாத ஊதியமும் வழங்க ரூ.27.85 கோடி நிதி செலவினத்திற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!