பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் திருநங்கை போட்டியாளர் – உறுதியான தகவல்!!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் முதல் வாரம் தொடங்க உள்ள நிலையில், முதன்முறையாக இந்நிகழ்ச்சியில் திருநங்கை இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாருமில்லை நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிளா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் போட்டியாளர்:
விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ளன. தமிழ் சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 5வது சீசன் வருகிற அக்டோபர் முதல் வாரம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து விலகும் முன்னணி நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் அதற்கான டீஸர் மற்றும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நடிகர் அபினய், நடிகை சாந்தினி, நடிகை மைனா நந்தினி, விஜய் டிவி பிரபலம் சுனிதா ஆகியோரின் பெயரும் அடிபட்டு வருகிறது. மேலும் சீனியர் நடிகைகள் என வடிவுக்கரசி, தீபா ஆகியோரின் பெயர்களும் நடிகர் ரமேஷ் கண்ணாவின் பெயரும் இடம்பெற்று வருகிறது. மேலும் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளது போல புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.
அண்ணன் குழந்தையுடன் தனுஷ் எடுத்த புகைப்படம் – அண்ணி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!
அதுமட்டுமின்றி முதல் முறையாக இந்த சீசனில் இரண்டு திருநங்கைகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் நடிகை ஷகிலாவின் மகள் மிளா என தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி தகவல்கள் வெளியான நிலையில் மிளா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. எனவே பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் முதல் நபர் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இனி இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் அடுத்தடுத்த போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.