“காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து விலகும் முன்னணி நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை திடீரென விலகியுள்ளார்.
காற்றுக்கென்ன வேலி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பல புதிய திருப்பங்களுடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை விட TRPயில் முன்னணி இடங்களை விஜய் டிவி சீரியல் பிடித்துள்ளது. அதில் ஒரு சீரியலான காற்றுக்கென்ன வேலி சீரியல் மாறுபட்ட கதையுடன் சென்று கொண்டிருக்கிறது. பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும் ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
அண்ணன் குழந்தையுடன் தனுஷ் எடுத்த புகைப்படம் – அண்ணி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!
ஆனால் வெண்ணிலாவின் ஆசையை புரிந்து கொள்ளாமல் திருமணத்திற்கு தந்தை ஏற்பாடு செய்வதால், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய ஆசிரியையின் உதவியுடன் படிக்க நினைக்கிறார். இடையில் பல சங்கடங்கள், பல போராட்டங்கள் இவை அனைத்தையும் கடந்து எப்படி கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார் வெண்ணிலா. இந்நிலையில் கல்லூரியில் தாளாளரான ஹீரோவுக்கும் இவருக்கும் காதல் வளர்கிறது.
தனது 3 வயது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – ரசிகர்கள் அதிர்ச்சி!
வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் பிரியங்கா குமார் நடித்து வருகிறார். ஹீரோவாக, ஏற்கனவே அரண்மனைக்கிளி சீரியலில் நடித்த சூர்யா தர்ஷன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பல புதுமுகங்கள் மற்றும் ஏற்கனவே சீரியலில் நடித்த பலர் இருந்தாலும், திரைப்படங்களிலும் பார்த்த முகமாக இருந்தவர் நடிகை மாளவிகா, இவர் சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது திடீர் என ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் இருந்து அவர் விலகி உள்ளதாகவும் அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.