தனது 3 வயது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு ஆண் குழந்தை இருப்பதாகவும், அவனுக்கு தற்போது 3 வயது ஆனதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் மகன் என்று சொன்னது அவரது நாய் குட்டியை ஆகும்.
நடிகை கீர்த்தி சுரேஷ்:
இந்திய திரைப்பட நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் முன்னதாக 2000 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 2013 ஆம் ஆண்டில் ‘கீதாஞ்சலி’ எனும் மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினையும் வென்றுள்ளார்.
சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – அர்ஜுன், பாட்டியின் புதிய சதி!
இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாணிக்காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் எனது ஆண் குழந்தைக்கு 3 வயதாகிவிட்டது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் முதல் நாளில் பார்த்த மாதிரியே இருக்கிறது. எனது சிறந்த அல்லது இருண்ட நாட்களில் நீங்கள் என்னை நிரப்பும் மகிழ்ச்சி கற்பனை செய்ய முடியாதது.
“விண்ணைத் தாண்டி வரப் போகிறார், சிம்பு” – புதிய அவதாரம்! பேஷன் விளம்பரம்!
என் மீது அளவுகடந்த அன்பு செலுத்தும் உன்னை நான் நேசிக்கிறேன் அன்பே Nyke என பதிவிட்டுள்ளார். என்ன கீர்த்தி சுரேஷிற்கு மகனா? என ஆச்சரியத்துடன் பார்த்தால், அது அவர் வீட்டு செல்ல நாய்க்குட்டி, நாய் குட்டியின் பிறந்தநாள் புகைப்படங்களை பதிவிட்டு அதில் தான் இந்த கேப்சன் கொடுத்திருக்கிறார். அதை தெரிந்து கொண்ட பின்னர் தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.