அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திடீர் பணியிட மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
பள்ளியில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பணியிட மாற்றம்:
தமிழக அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் தற்போது வரையிலும் நிரப்பப்படாத நிலையில் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுப்பதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் தேவைக்கு அதிகமாக இருக்கும் முதுகலை ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
TNTET தேர்வில் பாஸ் ஆவது எப்படி? – எளிய வழிமுறைகள்!
அதாவது, மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களை அதே மாவட்டத்தில் உள்ள தேவையுள்ள வேறு பள்ளிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நவ.20 ஆம் தேதி நடைபெறும் நேரடி கவுன்சிலிங் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் வழங்கப்பட வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.