
மக்களே..பான் கார்டில் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கலயா..?? ” அட, நாளைக்கு(31.12.2024) தான் கடைசி நாள்…உடனே செஞ்சு முடிங்க”..!!
இன்றைய காலத்தில் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டின் பயன்பாடானது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாட்டு மக்களின் அடையாளத்தை ஆதார் அட்டை உறுதி செய்கிறது. இதனால், இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு அவசியமானதாக உள்ளது. அதேபோல், பான் கார்டு என்பது தேசிய அளவில் அடையாளப்படுத்தும் ஒரு நிரந்தர எண் ஆகும். இது வருமான வரி தாக்கல் செய்வது, வருமான வரி பிடித்தம் திரும்ப பெறுவது போன்ற செயல்முறைகளுக்கு கட்டாயம் தேவைப்படுகிறது.
மேலும்,போலி பான் கார்டு பயன்படுத்தப்படுவதை முற்றிலும் தடுக்கும் விதமாக, பான் கார்டில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில், மத்திய நேரடி வரி வாரியம்(CBDT) அறிவித்தபடி, பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன்(31.12.2024) நிறைவடைகிறது. எனவே இச்செயல்முறையை முடிக்காதவர்கள் உடனடியாக செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























