
இது என்ன புதுசா இருக்கு..2025-ல் பிறக்கும் குழந்தைகள் “Beta Babies”-ஆ .!! ” அப்போ, நம்மல்லா யாரு”..?
தற்போதைய காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் மிகுந்த அறிவாற்றலை கொண்டு பிறக்கிறார்கள். சில குழந்தைகள் பிறக்கும்போதே பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத் தும் வகையில் வினோதமான செயல்களை செய்கிறார்கள். மேலும், 3 மாதங்கள் ஆன குழந்தை கூட மொபைல் போனை எவ்வாறு கையாள்வது என்பதை மிக எளிதில் கற்றுக் கொள்கிறது. அந்த வகையில், தற்போது அடுத்த தலைமுறை குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளர் மெக் கிரிண்டில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2024 ம் ஆண்டு வரையில் பிறந்த குழந்தைகள் எல்லாம் புதிய தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொண்ட “ஆல்பா” தலைமுறையினர் என்றும் அடுத்து 2025 ம் ஆண்டு முதல் 2039 ம் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகள் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்ப தாக்கமுடைய “பீட்டா” தலைமுறையினராக பிறப்பார்கள் என்றும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளர் மெக் கிரிண்டில் கூறியுள்ளார். மேலும், இவர்கள் GEN-BETA என்று அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, அடுத்த 2035 ம் ஆண்டுகளில் இருக்கும் உலக மக்கள் தொகையில் 16% பேர் Gen Beta தலைமுறையினராக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

























