பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு கொடுப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பொங்கல் பரிசு பொருள்களில் ரூபாய் 2500 ரொக்கமும் பொங்கலுக்கு தேவையான பொருள்களும் வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதற்காக தமிழக அரசு பொங்கல் பரிசு என பொங்கலுக்கு தேவையான பொருள்களும், ரொக்கமும் வழங்கும். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பொருள்களுடன் ரூபாய் 2500 ரொக்கமும் வழங்க உத்தரவிட்டார்.
அரியர் மாணவர்களுக்கு மீண்டும் அறிய வாய்ப்பு- புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால் பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடுதோறும் சென்று இன்று முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை வழங்கவுள்ளனர். அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் சென்று பொங்கல் பரிசினை பெற்று கொள்ளலாம். குடும்பத்தில் யார் சென்றாலும் பொங்கல் பரிசு வழங்கப்படும். எனவே கூட்டமாக செல்வதை தடுக்க வேண்டும்.
ஆயுட்கால சான்றிதழ் சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு- ஓய்வூதிய நலத்துறை அமைச்சர் உத்தரவு!!!
ஒரு நாளில் 200 குடும்ப அட்டை என காலை 100 பேருக்கும் மாலை 100 பேருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும். டோக்கன் பெற்று பொங்கல் பரிசு வாங்க செல்ல முடியாதவர்களுக்கு, வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் பரிசு வழங்கப்படும். பொங்கல் பரிசு வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் மேலும் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.