அரியர் மாணவர்களுக்கு மீண்டும் அறிய வாய்ப்பு- புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
புதுசேரி பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் பயிலும் மாணவர்களில் 2005-2006 மற்றும் 2014-2015 முதல் 2016 வரை உள்ள அரியர் மாணவர்களை ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த தேர்வுகள் 2 முறை நடைபெறும் எனவும் இதற்கான முதல் தேர்வு ஜனவரி மாதத்திலும், இரண்டாவது வாய்ப்பு ஜூன் மாதலும் நடைபெறும் என புதுசேரி கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியர் மாணவர்களுக்கு தேர்வு:
புதுசேரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பை முடிக்காத மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பாக மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி 2005-2006-ஆம் ஆண்டு மற்றும் 2014-2015,2016 ஆண்டுகளில் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வினை ஆன்லைன் மூலம் எழுதலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆயுட்கால சான்றிதழ் சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு- ஓய்வூதிய நலத்துறை அமைச்சர் உத்தரவு!!!
இவ்வாறாக இந்த தேர்வு 2 முறை நடத்தப்படும் முதல் முறை ஜனவரி 18-ஆம் தேதி முதல் பிப்ரவரி 23-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும், தேர்வுக்கான வினாக்கள் ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டு தேர்வு எழுதி விடைகளை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும்.
இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லா ரயில் சேவை – பிரதமர் மோடி டிச.28இல் துவக்கி வைக்கிறார்!!
இந்த தேர்வினை அனைத்து எம்.பி.ஏ. மாணவர்கள் (2005-06), மற்றும் 2014-15 முதல் 2016-ம் ஆண்டு எம்.காம், எம்.ஏ. (ஆங்கிலம், சமூகவியல், இந்தி) பிரிவு மாணவர்கள் தேர்வு எழுதவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதாவது ஜனவரி மாதத்திலும், ஜூன் மாதத்திலும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. தேர்வு எழுத பல்கலைக்கழக இணையதள முகவரியில் மீண்டும் பதிவு செய்யவேண்டும். ஜூன் மாதம் நடக்கும் தேர்தல் குறித்த விவரங்கள் மே மாதம் வெளியிடப்படும். பல்கலைக்கழக இணையதள அறிவிப்புகளை மாணவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.