தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 – டோக்கன் விநியோகம் மும்முரம்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 வாரங்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவும் வகையில் 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது.
நிவாரண நிதி:
கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த எதிர்பாராத அறிவிப்பானால் பல ஏழை குடும்பங்களில் தங்களது அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல் காணப்பட்டது. பின்பாக நாடு முழுவதும் கொரோனா பரவலின் வேகம் குறைந்து வந்ததை தொடர்ந்து மாநிலங்கள் தோறும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சற்றே இயல்பு நிலைக்கு திரும்பியது.
தமிழகத்தில் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி தொலைக்காட்சி பாடங்கள்!!
இந்த நிலையில் நாடு முழுவதும் மீண்டுமாக கொரோனா இரண்டாம் அலை தாக்க துவங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 4000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என மாநில முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் படி நேற்று (மே 10) முதல், கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்குவதற்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கொரோனா நிவாரண நிதி அனைத்து ஏழை பெண்களுக்கும், குடும்பதாரர்களுக்கும், தாய்மார்களுக்கும் ஏற்ற நேரத்தில் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் இரண்டாம் நாள் பணி இன்று (மே 11) காலை துவங்கி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
பேங்க் லோன் கட்ட முடியாத சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியவில்லை அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும்