தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை இதோ!

0
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - இன்றைய வானிலை அறிக்கை இதோ!

தமிழகத்தில்  ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் மே மாதத்திற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் குளுமையான சூழல் நிலவியுள்ளது. தற்போது வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பதிவாகியுள்ளது.

12ம் வகுப்பு முடித்தவர்களா? இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை இயல்பைவிட 28% அதிகம் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில்  ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!