மக்களே உஷார் …நெல்லை மாவட்டத்திற்கு “ரெட்”அலர்ட்..!! “சென்னை வானிலை மையம் தகவல்”..!!
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. அந்த வகையில், கனமழை எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(13.12.2024) “ரெட்” அலர்ட் விடுத்துள்ளது.
மேலும், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று(டிசம்பர் 13) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


























