தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்ப சலனம் காரணமாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. அத்துடன், வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தென் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ் புத்தாண்டன்று (14.04.2025) மின்தடை செய்யப்படுமா…? அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!
அதாவது, நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவாட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


























