தமிழகத்தில் அடுத்த 3 நேரத்தில் மழைக்கு வாய்ப்பு -எந்த மாவட்டத்தில் தெரியுமா? இன்றைய வானிலை தகவல்!
தமிழகம் மற்றும் புதுவையில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே கோடை மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறுகிறார். அடுத்த 3 நாட்களுக்கு இந்த காலநிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை:
தமிழகத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். பகல் நேரங்களில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த வெப்பத்தால் அவதிப்பட்டு வரும் வேளையில் சற்று ஆறுதல் அளிக்கும் தகவலை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதாவது தமிழகம் மற்றும் புதுவையில் வெப்ப சலனம் காரணமாக மே. 29, 30, 31 ஆகிய 3 தினங்களும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
தங்கநகையின் இன்றைய விலை எவ்வளவு தெரியுமா? சவரன் ரூ.44800 க்கு விற்பனை – ஞாயிறு விலை நிலவரம்!
மேலும் சென்னையின் புறநகர் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் இன்று (மே.28) திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 55 முதல் 65 கி. மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். அதனால் மீனவர்கள் மேற்கண்ட நாட்களில் கடலுக்கு செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது