தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை – மீனவர்களுக்காக முக்கிய எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் வெப்பநிலை 2 – 4 டிகிரி செல்ஸியஸ் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
வெப்ப சலனம் மற்றும் மேற்கு திசை காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளின் ஒரு சில இடங்களில் இன்று (ஜூன்.13) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல ஜூன்.14,15,16,17 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அகவிலைப்படி திடீர் உயர்வு – அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!
நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். மேலும் அரபிக் கடல் பகுதியில் புயல் உருவாகி உள்ளது அடுத்த 4 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 65 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.