தமிழகத்தில் கனமழை கொட்ட போகுது… இப்போவே அலர்ட்டா இருங்க மக்களே.. வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் மீனவர்களுக்கும் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அத்துடன் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை.4, 5ம் தேதிகளில் திருப்பூர், திருநெல்வேலி, திண்டுக்கல், கன்னியாகுமரி தென்காசி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை மாத இறுதிக்குள் 50,000 இ-சேவை மையங்கள் – அறிவிப்பு வெளியீடு!
அத்துடன் ஜூலை 6 ஆம் தேதி தமிழகத்தில் நீலகிரி கோயம்புத்தூர் தேனி திருப்பூர் திண்டுக்கல் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழையும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூலை 7ம் தேதி தேதி வரை தென்கிழக்கு கடலோரப் பகுதிகள் மன்னர் வளைகுடா அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள்,தென்மேற்கு வங்கக் கடல் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதி ஆகிய இடங்களில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இந்த நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.