உச்சம் தொட்ட ஆபரணத்தங்கத்தின் விலை – சவரனுக்கு ரூ. 200/- உயர்வு..இன்றைய நிலவரம் இதோ!
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இன்றைய விலை நிலவரம் குறித்து இப்பதிவில் காண்போம்.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று (மார்ச் 30) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 44, 520 க்கும் ஒரு கிராம் ரூ. 5, 565 க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று (மார்ச் 31) காலை நேர நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.
வங்கியில் வேலை வேண்டுமா? CSB வங்கியில் உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
இதனையடுத்து ஒரு சவரன் ரூ.44,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 25 உயர்ந்து ரூ. 5,590க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ. 1.30 காசுகள் உயர்ந்து ரூ. 77.50க்கு விற்பனையாகி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் ஒரு கிலோ வெள்ளி 77,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஒரு சவரன் 6000 – ஐ தொடும் நிலைக்கு வந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரிக்கும் ஆபரண தங்கத்தின் விலையில் நகைப்பிரியர்கள் புதிய தங்க நகைகள் வாங்குவதில் பின்னடைவை சந்திக்கின்றனர்.
Exams Daily Mobile App Download