தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1500ஐ தாண்டி உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் இருவர் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் இதுவரை 1520 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் உட்பட இருவர் உயிரிழந்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்து உள்ளார். இதனால் கொரோனவால் தமிழகத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் ஒரே நாளில் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டில் மே 3 வரை ஊடரங்கில் எந்த வித தளர்வும் கிடையாது – முதலமைச்சர் அறிவிப்பு !!!!!
தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்தவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 18 பேருக்கும், திருச்சியில் 4 பேருக்கும் விழுப்புரத்தில் 3 பேருக்கும், அரியலூர் மற்றும் திண்டுக்கல்லில் தலா 2 பேருக்கும் கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டது உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பாதி பகுதிகளில் கொரோனாவின் காலடித்தடமே படவில்லை – ஆறுதல் அளிக்கும் தகவல்..!
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |