ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்த தங்கத்தின் விலை – ஷாக்கில் நகைப்பிரியர்கள்!
ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது கடந்த 10 நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று அதிகபட்ச விலை உயர்வை சந்தித்து உள்ளது. இதனால் நகைப்பெரியர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை:
தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் என்பது அனைவரும் தினசரி அறிந்த கதையாக உள்ள போதிலும் ஒரே நாளில் யாரும் எதிர்பாராத அளவிற்கு விலை உயரும் போது வியாபாரிகள் உட்பட பொதுமக்களும் சற்று அதிர்ச்சி அடைகின்றனர். அந்த வகையில் கடந்த 10 நாட்களுடைய காட்டிலும் இன்று தங்கத்தின் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூபாய் 680 உயர்ந்து, ₹48,120 க்கும், ஒரு கிராம் ரூபாய் 6015க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிவாய்ப்பு – பெண்களுக்கு நல்ல சான்ஸ்!
இதே போல் 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் ரூபாய் 51,880க்கும், ஒரு கிராம் ரூபாய் 60485 கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் கிராமுக்கு ரூபாய் 1.20 காசுகள் உயர்வை சந்தித்து, ஒரு கிராம் ரூபாய் 78.20 காசுகளுக்கும், ஒரு கிலோ 78,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.