தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தேர்வு அறிவிப்பு
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் வெளியிடப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த முறை எவ்வளவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தேர்வர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்த தேர்வுக்கு எதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் எழுத்துத் தேர்வு உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இந்த தேர்வு குறித்த விவரங்களை tnusrb.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.