உத்தரபிரதேசம் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது.
அகவிலைப்படி உயர்வு
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் படி சம்பளம் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த முறை அகவிலைப்படி 4% அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது மார்ச் 2024ல் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNUSRB SI தேர்வு அறிவிப்பு 2024 – சற்றுமுன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் DA உயர்வானது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் புதுப்பிக்கப்படும். அந்த வரிசையில் 2024 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு இந்த மாதம் வெளியாக இருக்கிறது. மேற்கு வங்க அரசு இந்த வாரம் பட்ஜெட் சமர்ப்பணத்தின் போது மாநில ஊழியர்களுக்கு 4% DA உயர்வை அறிவித்தது. ஆனால் உத்திரபிரதேச அரசு இது வரை அறிவிப்பு வெளியிடாமல் இருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பிற்கு பின் ரூ. 314 கோடி செலவிய ஏற்படும். அதே போல இந்த உயர்வுக்கு பின் 50% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.