TN Police Constable பணிக்கான உடற்தகுதித் தேர்வு – ஏப்ரல் 21 முதல் தொடக்கம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் TNUSRB பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு, தனித்திறன் மற்றும் உடல் தகுதித்தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNUSRB தேர்வுக்கான அறிவிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) சார்பாக இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10906 காலிப்பணியிடங்களுக்கான உடற்தகுதி நேர்முகத் தேர்வுகள் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.கார்த்திக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் நிலை போலீசார், சிறைக்காவலர், தீயணைப்பு துறை வீரர்களுக்கான காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களில் பெண்கள் 355 பேர், 1844 பேருக்கு சீதக்காதி சேதுபதி மைதானத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு, தனித்திறன் மற்றும் உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தின் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
அதில் பங்கேற்பவர்கள் புகைப்படத்துடன் கூடிய நுழைவு கடிதம், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகடிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். மேலும் அவர்கள் அரசு தெரிவித்த கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கிருமிநாசினி திரவம் வைத்திருப்பது அவசியம் ஆகும். அவர்கள் காலை 5.30 மணிக்குள் உடற்தகுதி தேர்வு நடைபெறும் மைதானத்திற்கு வர வேண்டும். இந்த தேர்வுக்கு தாமதாக வருவோருக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. மேலும் அவர்கள் அலைபேசி கொண்டு வர அனுமதிக்கப்படாது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Please remove this news