தமிழகத்தின் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
தமிழகத்தின் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தின் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தின் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

விதர்பா (மகாராஷ்டிரா) முதல் தமிழகம் வரை 1.5 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .

வானிலை ஆய்வு மையம் தகவல்:

தமிழகத்தில் கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெப்பத்தில் இருந்து சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, விதர்பா (மகாராஷ்டிரா) முதல் உள் தமிழகம் வரை 1.5 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 2.1 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

17.04.2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வடக்கு உள் தமிழக மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

18.04.2021 முதல் 19.04.2021 வரை:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் உடற்தகுதித்தேர்வு ஒத்திவைப்பு – முக ஸ்டாலின் கோரிக்கை!!

20.04.2021 முதல் 21.04.2021 வரை:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு? அரசு ஆலோசனை!

வெப்பநிலை முன்னறிவிப்பு:

20.04.2021 முதல் 21.04.2021 வரை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மாயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, மற்றும் கரூர் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தலா 6 செ.மீ மழை பெய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!