
+2 மாணவர்கள் ஒரு நற்செய்தி.. உயர்கல்வி பற்றி தெரிந்துகொள்ள வழிகாட்டுதல்.. தமிழக அரசு எடுத்த சிறப்பு நடவடிக்கை..!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். மேலும், இத்தேர்வுக்கான முடிவுகள் மே 8 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு முடித்த பள்ளி மாணவ – மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, செங்கல்பட்டு பவுஞ்சூரில் செய்யூர் MLA பாபு தலைமையில் மே 20 ஆம் தேதி நடந்தது.
BHEL நிறுவனத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – 40+ காலிப்பணியிடங்கள் || நேர்காணல் மட்டுமே!
இந்நிலையில் தற்போது “உயர்கல்வி செல்லும் மாணவர்களின் வழிகாட்டலுக்காக “கல்லூரிக் கனவு” என்ற கையேட்டை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ளது. இதில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண், பாலிடெக்னிக், ITI, போட்டித் தேர்வுகள் மற்றும் உதவித் தொகைகள், வங்கிக் கடன், அயல் நாடுகளில் கல்வி என பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் அடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது”. எனவே உயர் கல்விக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பற்றி தகவல் பெற மாணாக்கர்கள் https://naanmudhalvan.tn.gov.in/reportsmedia/landing_data/Text_b65da199_NaanMudhalvan_Kalluri_Kanavu_2025.pdf என்ற லிங்க் மூலம் டவுன்லோடு செய்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

























