TNRD கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.62,000/- || 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கோயம்புத்தூரில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே 09/10/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TNRD கோயம்புத்தூர் |
பணியின் பெயர் | ஈப்பு ஓட்டுநர் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09/10/2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNRD கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:
ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி:
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (முத்திய சட்டம் 59/1988)-ன்படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஒட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2019 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 42 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் துறை சம்பள விவரம்:
ஈப்பு ஓட்டுநர் – ரூ.19,500 – 62,000/-
ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.34,000/- ஊதியம்!
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TNRD கோயம்புத்தூர் விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் 09/10/2023
க்குள் விண்ணப்பிக்கலாம்.