TNPSC தேர்வில் முழு மார்க் வேண்டுமா? உங்களுக்கான முக்கியமான கேள்வி பதில் இதோ!
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொதுத்தமிழில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகப்படுத்துகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் தமிழ் பாட பிரிவில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
1. ‘ஊ’ என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு
(A) இறைச்சி
(B) உலகம்
(C) உயிர்
(D) உயர்வு
விடை : (A)
2. ‘து’ என்னும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?
(A) ஆறு
(B) துப்பு
(C) உண்
(D) துன்பம்
விடை : (C)
3. ‘எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்’ இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு
(A) கீழ்க்கதுவாய்
(B) இணை
(C) கூழை
(D) மேற்கதுவாய்
விடை : (A)
வங்கி கணக்கு பயன்படுத்துபவரா நீங்கள்? அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கலாம் தெரியுமா?
4. தவறாக பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க
(A) வெண்மதி = வெண்+ மதி
(B) வெந்துவர்ந்து = வெந்து + உவர்ந்து
(C) காடிதனை =காடு+இதனை
(D) கருமுகில் = கருமை + முகில்
விடை : (A)
5. பொருந்தாத இணையினைக் காண்க
(A) “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – பாரதிதாசன்
(B) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – கணியன் பூங்குன்றனார்
(C) “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” இளங்கோவடிகள்
(D) “அழுது அடியடைந்த அன்பர்” – திருமூலர்
விடை : (D)


























