TNPSC Tamil Ilakkanam Vinayalanayum Peyar Study Material – Free PDF Download

0
TNPSC Tamil Ilakkanam Vinayalanayum Peyar Study Materials
TNPSC Tamil Ilakkanam Vinayalanayum Peyar Study Materials

TNPSC Tamil Ilakkanam Vinayalanayum Peyar Study Material – Free PDF Download

 TNPSC தமிழ் தகுதித்தேர்வு – வினையாலணையும் பெயர்:   

வினையின் அடிப்படையில் உருவாகும் பெயர்கள்:

  • பொதுவாக, வினையின் அடிப்படையில் உருவாகும் பெயர்கள் இரண்டு வகைப்படும்.  அவை,
  1. தொழில் பெயர் 
  2. வினையாலணையும் பெயர் 

தொழில் பெயர்:

  • ஒரு வினையிலிருந்து உருவாகி, அவ்வினையை குறிக்கும் பெயராக வருவது “தொழில் பெயர்” ஆகும். 
  • எடுத்துக்காட்டாக, 

      ஆடு  – ஆட்டம் 

      ஓடு – ஓட்டம் 

  • இதில், ஆடு, ஓடு ஆகியவை வினை சொற்கள் ஆகும். ஆட்டம், ஓட்டம் ஆகியவை தொழில்பெயர்களாகும்.

வினையாலணையும் பெயர்:

  • வினையாலணையும் பெயர் = வினை + ஆல் + அணையும் பெயர். அதாவது, தொழிலை செய்பவருக்கு பெயராக வருவது “வினையாலணையும் பெயர்” எனப்படுகிறது. 
  • இவை இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலத்தையும் காட்டும். அதேபோல், ஒருமை, பன்மை, மூன்று பால் (ஆண்பால், பெண்பால், பலர்பால்) ஆகியவற்றையும் காட்டும்.
  • எடுத்துக்காட்டாக, 

                  வந்தான் (வந்தவன்) நல்லவன்.

                 வந்தானைப் (வந்தவனைப்) பார்த்தேன்.

                  வெந்ததை உண்கிறோம். 

  • இத்தொடர்களில் உள்ள வந்தான், வெந்தது ஆகிய வினைமுற்று சொற்கள் வினையாலணையும் பெயர்களாக வருகின்றன. 
  • வினையாலணையும் பெயர்கள் பொதுவாக குறிப்பு வினையிலிருந்தும் அமையும். எடுத்துக்காட்டாக, 

                       கரியவனைக் கண்டாயா?

                      கரியானை வரச் சொல்?

வினையாலணையும் பெயரின் வகைகள்:

  • வினையாலணையும் பெயர் மூன்று வகைப்படும். அவை 
  1. தன்மை வினையாலணையும் பெயர் 
  2. முன்னிலை வினையாலணையும் பெயர் 
  3. படர்க்கை வினையாலணையும் பெயர் 

தன்மை வினையாலணையும் பெயர்:

  • தன்மை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால், அது  “தன்மை வினையாலணையும் பெயர்” எனப்படும். எடுத்துக்காட்டாக,

                            எடுத்தேனைப் பார்த்தாயா?

                            எடுத்தேமைப் பார்த்தாயா?

  • இதில், முதலில் உள்ள எடுத்துக்காட்டு ஒருமையையும், இரண்டாவது எடுத்துக்காட்டு பன்மையையும் குறிக்கிறது.

முன்னிலை வினையாலணையும் பெயர்:

  • முன்னிலை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால், அது “முன்னிலை வினையாலணையும் பெயர்” எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

                            சென்றாயைக் கண்டேன்.

                           சென்றீரைக் கண்டேன்.

  • இதிலும், முதலில் உள்ள எடுத்துக்காட்டு ஒருமையையும், இரண்டாவது எடுத்துக்காட்டு பன்மையையும் குறிக்கிறது.

படர்க்கை வினையாலணையும் பெயர்:

  • படர்க்கை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால், அது “படர்க்கை வினையாலணையும் பெயர்” எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

                        படித்தவனுக்குப் பரிசு கிடைத்தது.

  • தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று வினையாலணையும் பெயர்களும் உடன்பாட்டுப் பொருளில் வரும்.
  • வினையாலணையும் பெயர் எதிர்மறைப் பொருளில் வருவதும் உண்டு.

                          பாடாதவர் பரிசு பெற முடியாது.

  • இதில், பாடாதவர் என்பது எதிர்மறைப் பொருளை உணர்த்துகிறது.
  • வினையாலணையும் பெயர்கள் ஒரு வகையில் தொழில்பெயர்கள் போன்றவையே. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தொழில்பெயருக்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடுகளை காண்போம்.

தொழில் பெயர் 

வினையாலணையும் பெயர் 

தொழிலை மட்டும் உணர்த்தும்

தொழிலையும் தொழில் செய்த பொருளையும் உணர்த்தும்
படர்க்கை இடத்தில் மட்டும் வரும்

தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் வரும்

காலம் காட்டாது

காலம் காட்டும்

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!