
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் மாதந்தோறும் ரூ. 3,000 வழங்கும் திட்டம்…விவசாய மக்களின் கோரிக்கை நிறைவேற்ற படுமா..??
2025 – 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு சார்பாக விவசாய மக்களிடம் வேளாண் பட்ஜெட் குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது . இதில், “விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் அதாவது, விவசாயம் செய்யும்போது உயிரிழந்தால் ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்” என கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
மேலும்,அதில் “60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தை போல் மாதத்தோறும் ரூ. 3,000 வழங்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல், “விவசாய விளைபொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்வதற்காக இலவச தனி பஸ்கள் மற்றும் இலவச கொரியர் வசதிகள் செய்து தருமாறு” கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், “உரக்கடை வைக்க மானியம், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ. 4,400 மற்றும் நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,100 என சத்தீஸ்கர் மாநிலத்தை போல் இங்கும் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

























