முருகனடியார்கள்
நக்கீரர்:
- மதுரை கணக்காயனார் மகன்.
- இவர் இயற்றிய நூல் – திருமுருகாற்றுப்படை கடைச்சங்க பத்துப்பாட்டின் முதல் நூல்.
- முருகனருளால் பூதத்தின் இடர் நீங்கி இன்புற்றார்.
அருணகிரிநாதர்:
- இயற்றியவை – கந்தரலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தரனுபூதி, திருவகுப்பு ஆகியன.
- சிவன், சக்தி, விஷ்ணு அனைவரையும் முருகனோடு இணைத்துப் புகழந்தார்.
- அருணை கோபுரத்தில் தங்கியிருந்து 36 ஆயிரமாவது திருப்புகழ் பாடும்போது முருகன் காட்சியளித்தாராம்.
- மயில் விருத்தம், வேல்விருத்தம் பாடினார்.
- ‘வாக்கிற்கு அருணகிரி” எனப் பெயர் பெற்றார்.
குமரகுருபரர்:
- பாண்டிய நாட்டில் ஸ்ரீவைகுண்டமருகில் கைலாசபுரத்தில் கவிராயர் சிவகாமசுந்தரியின் மகன்.
- முதல் 5 ஆண்டுகளாக ஊமையாக இருந்தார்.
- செந்திலாண்டவரால் பேச்சுதிறன் பெற்று ‘கந்தர் கலி வெண்பா” பாடினார்.
- இவர் இயற்றியவை – கயிலை கலம்பகம், மீனாட்சிப்பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் ஆகியன.
- இவரது ஞானசாரியர் – தரும ஆதீன மாசிலாமணி தேசிக சுவாமிகள்.
- இவர் காசியில் மடங்கட்டி தொண்டாற்றினார்.
- காசியில் வைகாசி கிருஷ்ணபட்ச திதியில் இறைவனடி சேர்ந்தார்.
சைவம்:
- மூலகாமங்கள் 28. உபாகங்கள் 20 போன்ற வரையறைகள் 11ம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு பின்பே தமிழகத்தில் பரவின.
- திரிலோனசிவாசாரியர் இயற்றிய வடநூல் – சித்தாந்தசாராவளி.
- இதில் வடநூல் ஆகமங்களின் நாற்பாத பொருள்களை சுருக்கமாகவும், வரிசைப்படுத்தியும் கூறுகிறது. அதன் கிரியாபாதத்தின் இறுதியில் சைவாசாரியார் வரலாறு கூறப்படுகிறது.
- சித்தாந்த சாராவளியின் உரையாசிரியராகிய அநந்த சிவாச்சாரியார் ‘இங்கு பூர்வகதை” என்ற வரலாற்று குறிப்பை தருகின்றார்.
- அதன்படி கோதாவரி கரையில் மந்திரகாளி என்ற பட்டணம் உண்டு. அங்கு மந்திர காளீசுவரைச் சூழ ஆமர்த்தகம், புட்பகிரி, கோளகி, இரணபத்ரம் என நான்கு சைவ மடங்கள் இருந்தன.
- அங்கிருந்த சைவாச்சாரியரை இராஜேந்திரசோழன் காஞ்சி மற்றும் சோழ மண்டலத்திலும் ஸ்தாபித்தான்.
- மன்னன் முதலாம் இராஜேந்திரன் ‘கங்கைகொண்ட சோழன்” என புகழப்பட்டான்.
- இந்நிகழ்ச்சி நடந்தது கி.பி.23 ஆகும். இவற்றை கல்வெட்டு சான்றுகளோடு கலந்து நோக்குபவர் – டி.வி. சதாசிவபண்டாரத்தார்.
- நிகண்டு நூல்களாகிய திவாகரம், பிங்கலத்தை என்பவை வேதம், அங்கம், புராணம், உபபுராணம், ஸ்மிருதி என்பனவற்றின் பெயர்களையும், தொகைகளையும் கூறுவன. ஆனால் ஆகமங்களை பற்றி இவ்வாறு எடுத்து கூறுவதில்லை.
- ஸ்ரீகண்டாச்சாரியார் என அழைக்கப்படுபவர் – நீலகண்ட ஆசாரியார்.
- நீலகண்டச்சாரியார் – பிரஹ்மசூத்திரங்களுக்கு முறைப்படி பாஷ்யம் செய்துள்ளார்.
- சிவசாரூபம் பெற்ற பதமுத்தர்களில் அவதாரம் எனக் கூறப்படும் யோகாசாரியார்களுள் முக்கியமானவர் – சுவேதாசாரியார்.
- சுவேதாசாரியார், நீலகண்டசாரியாரின் ஆசிரியர் என்பது ஸ்ரீகண்டாஷியத்தால் விளங்குகிறது.
- வருணபத்ததி, சைவாகம ஞானம் பெற்ற தலையாய சைவாசாரியார்கள் – 1)ஸ்ரீதுருவாசர் 2)பைங்கலாச்சாரியார் 3)உத்திரச்சோதி 4)சத்தியசோதி
5)ஸ்ரீகண்டர்(நீலகண்டர்) 6)ஸ்ரீவிஷ்ணுகண்டர் 7)வித்யாகண்டர் 8)ராமகண்டர் - இவர்கள் அனைவரையும் ‘தேசிகோத்தமர்கள்” என அழைக்கின்றனர்.
- வாகீச முனிவர் 12ம் நூற்றாண்டின் இறுதியில் திருவொற்றியூரில் சதுரான பண்டிதர் மடத்தில் தங்கியிருந்து, சோமசம்பு பத்ததி, ஆளுடையநம்பி ஸ்ரீபுராணம் முதலியவற்றை பொதுமக்களுக்கு சொற்பொழிவாற்றினார்.
- வாகீசமுனிவர் எழுதிய நூல் – ஞானமிருதம் (அகவற்பாக்களால் ஆனது)
சிவநெறிக்கும்ஆழ்வார் நெறிக்கும் உள்ள வேறுபாடு:
- 1)சிவநெறியில் முதற்கடவுளுக்கு பிறப்பு இல்லை. அவதாரம் கூறப்படுவதில்லை. ஆனால் ஆழ்வார் நெறியில் கடவுளுக்கு 10 அவதாரங்கள் கூறப்படுகின்றன.
- 2)பரமுத்தி நிலையில் உயிர்க்கோ, கடவுளுக்கோ உடம்பு உண்டு என்ற கொள்கை சைவத்தில் கிடையாது. வைணவத்தில் பரமுத்தி நிலையில் கடவுளுக்கும் உயிர்களுக்கும் திவ்விய சரீரம் உள்ளது.
PDF Download
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்