அரசு பணிகளுக்கு டைப்பிங், கம்ப்யூட்டர் தேர்ச்சி கட்டாயம் ?? – தலைமை செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் இனி வரும் அரசு பணிகளுக்கு சேர விரும்புவோருக்கு டைப்பிங், கம்ப்யூட்டர் தேர்ச்சி கட்டாயம் ஆக்கிடலாமா என்ற ரீதியில் தற்போது தமிழக அரசின் தலைமை செயலர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
அரசு பணிகள் 2020 !!
தமிழக அரசின் அனைத்து துறைகளும் தற்போது கணினி மையமாக்கப்பட்டுள்ளதால் அரசு பணிகளுக்கு பெறுவோர் அனைவரும் கட்டாயமாக கணினியினை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இதனால் தேர்வர்கள் டைப்பிங், கம்ப்யூட்டர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது இன்றியமையாதது.
ஏனெனில் அரசின் அனைத்து துறை செயல்பாடுகளும் தற்போது ஆன்லைனிலேயே நடைபெற்று வருகிறது. இதனால் கணினியினை வேகமாக கையாளும் திறன் கொண்டவர்கள் மற்றும் தட்டச்சில் அதிக திறமை படைத்தவர்கள் மட்டுமே இந்த செயல்பாடுகளில் ஈடுபட முடியும்.
டைப்பிங், கம்ப்யூட்டர் தேர்ச்சி கட்டாயம் ??
இதனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், தமிழக தலைமை செயலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், இனி வரும் அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவர்க்கும் டைப்பிங், கம்ப்யூட்டர் மற்றும் ஆபீஸ் ஆட்டோமேஷன் போன்ற தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு பணிக்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம் – தலைமை செயலாளர் உத்தரவு !
இது குறித்து தலைமை செயலர் அனைத்து துறை செயலர்களுக்கும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனால் இனி வரும் அரசுப் பணியிடங்களுக்கு இது போன்ற தேர்ச்சி கட்டாயமாக்கப்படலாம் என்றே தெரிகிறது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |