TNPSC குரூப் 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
TNPSC தேர்வாணையம் நடப்பாண்டுக்கான அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2 , குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தற்போது பாடத்திட்டங்களை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாடத்திட்ட மாற்றங்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு TNPSC தேர்வாணையம் நடப்பாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி மாதத்திலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இத்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். அத்துடன் குரூப் 4 தேர்வுக்கு 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் குரூப் 4 தேர்வுக்கு அதிக போட்டியாளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
மேலும் TNPSC தேர்வுகளில் ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு தமிழ் மொழியை கட்டாயமாக்கி உள்ளது. அத்துடன் கொரோனா காரணமாக கடந்த வருடம் அரசு போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை. அதனால் போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் அதிக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனியார் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களும் அரசு போட்டி தேர்வுக்கு படித்து வருகின்றனர். இதையடுத்து தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் வினாத்தாளையும், பாடத்திட்டத்தையும் அரசு மாற்றியமைத்துள்ளது.
தமிழகத்தில் 15 – 18 வயதுக்கு உட்பட்டோர் கவனத்திற்கு – கொரோனா தடுப்பூசி முன்பதிவு!
அதனால் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் குரூப் 4 VAO தேர்வு நடைபெறுமா? அல்லது புதியதாக ஏதேனும் மாற்றங்களை கொண்ட பாடத்திட்டம் வெளியிடப்படுமா என்று இது தொடர்பான மேலும் சில சந்தேகங்கள் தேர்வர்கள் மத்தில் எழுந்துள்ளது. இது குறித்து TNPSC தேர்வாணையம் கூறியதாவது, “தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இதனை பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் அத்துடன் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை தீர்க்கும் வகையில் விரைவில் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் புதியதாக வெளியிடப்படும் என்றும் TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.