தமிழகத்தில் 15 – 18 வயதுக்கு உட்பட்டோர் கவனத்திற்கு – கொரோனா தடுப்பூசி முன்பதிவு!

0
தமிழகத்தில் 15 - 18 வயதுக்கு உட்பட்டோர் கவனத்திற்கு - கொரோனா தடுப்பூசி முன்பதிவு!
தமிழகத்தில் 15 - 18 வயதுக்கு உட்பட்டோர் கவனத்திற்கு - கொரோனா தடுப்பூசி முன்பதிவு!
தமிழகத்தில் 15 – 18 வயதுக்கு உட்பட்டோர் கவனத்திற்கு – கொரோனா தடுப்பூசி முன்பதிவு!

இந்தியா முழுவதும் ஜனவரி 3 தேதி முதல் 15 முதல் 18 வயதினர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் தொடங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

15 – 18 வயது சிறார்களுக்கு தடுப்பூசி:

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிட் ஷீல்டு என்ற இரண்டு வகையான தடுப்பூசிகள் போடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். தற்போது மத்திய அரசு 15 முதல் 18 வயதினர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகளை துவங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தடுப்பூசி போடுபவர்கள் கோவின் இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய முடிவு!

ஆதார் கார்டு மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் கார்டு இல்லாதவர்கள் 10ம் வகுப்பு அடையாள அட்டையை வைத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.இதன் சிறப்பு ஏற்பாடாக, கோவின் இணையதளத்தில், அடையாள அட்டைப் பட்டியலில் 10ஆம் வகுப்பு அடையாள அட்டை இணைக்கப்படும் என கோவின் இணையதளத்தின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்துள்ளார்.இதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 3ம் தேதி 15 முதல் 18 வயதினர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முன்னேற்பாடுகள் செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

இந்த அறிவிப்பு பற்றி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் 15 முதல் 18 வயதினர்கள் 33.20 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு ஜனவரி மாதத்தில் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்துள்ளார். அந்த வகையில் முன்களப் பணியாளா்களுக்கு பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்த பிரதமா் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 9.78 லட்சம் போ் மருத்துவ முன்களப்பணியாளா்கள் உள்ளனா்.

தமிழக தாலுகா ஆபிசில் 5 வது முடித்தவர்களுக்கான வேலை – உதவியாளர் பணியிடங்கள்..!

தமிழகத்தில் 2ம் டோஸ் செலுத்தவர்கள் 95 லட்சம் போ் உள்ளனா். அவா்கள் விரைந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மேலும் 2,400 போ் சுகாதார ஆய்வாளா்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் , மேலும் ஒப்பந்த பணியாளா்கள் பணிக்காலம் நவம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், மாா்ச் 31-ஆம் தேதி வரை யாரையும் விடுவிக்கக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!